வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வேறு ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 விதமான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் கமிஷன் தகவல்
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 117 வார்டுகளில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 228 பேர் வாக்களிக்கவுள்ளனர் அதேபோன்று 11 பேரூராட்சிகளில் உள்ள 168 வார்டுகளில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 889 வாக்காளர்கள் என மொத்தம் 3.36 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இத்தேர்தலில் 1185 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் இவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷனால் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது
இந்த அட்டை இல்லாத வகையில் வாக்காளர்கள் ஆதார் கார்டு, தேசிய வேலை வேலை உறுதி திட்ட பணி அட்டை, போட்டோவுடன் கூடிய வங்கி புத்தக அட்டை, தபால் கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கிய மருத்துவ காப்பீடு அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் வழங்கிய ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட் புத்தகம், போட்டோவுடன் கூடிய பென்ஷன் புத்தகம், மத்திய மாநில அரசு பொது நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை , எம்பி எம்எல்ஏ மேல் சபை உறுப்பினர்களுக்கு வழங்கிய அடையாள அட்டை என ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது