/* */

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம்: சிவகங்கையில் வெற்றி கொண்டாட்டம்

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் பெற்றதை அடுத்து சிவகங்கையில் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி.

HIGHLIGHTS

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம்: சிவகங்கையில் வெற்றி கொண்டாட்டம்
X

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் பெற்றதையடுத்து, சிவகங்கையில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் பெற்றதை அடுத்து, சிவகங்கையில் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சார்பில் நடைபெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் பெற்றதை கொண்டாடும் விதமாக இன்று சிவகங்கையில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சார்பாக அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஒன்றிணைத்து இந்திய ஹாக்கி அணிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் இந்திய ஹாக்கி மட்டை வடிவிலான பிரமாண்டமான கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது.

இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணமாக பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்த வாழ்த்து அட்டையில் இளைஞர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.

இந்நிகழ்ச்சி நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சேர்மன் பாரூக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சிவகங்கை திமுக நகர செயலாளர் துரை ஆனந்த், கேப்டன் சரவணன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுநல சிந்தனையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...