பிரதமருக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் முதல்வரை கண்டித்து மனிதச்சங்கிலி போராட்டம்
சிவகங்கை அரண்மனைவாசலில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மாவட்டத் தலைவர் மேபல் சக்தி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் முதல்வரை கண்டித்து சிவகங்கை பாஜக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த வாரம் பஞ்சாபிற்கு சென்ற போது வழியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அம்மாநில முதல்வர் மற்றும் சோனியா காந்தியை கண்டித்து மாநில அளவில் மாவட்டத்தின் தலைநகரிலும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது .
அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை அரண்மனைவாசல் முதல் தொடங்கி பேருந்து நிலையம் வரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மாவட்டத் தலைவர் மேபல் சக்தி தலைமையில், பஞ்சாப் முதல்வரை கண்டித்து காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓபிசி அணி, வர்த்தகப் பிரிவு மற்றும் பிரச்சார பிரிவு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஏராளமான தொண்டர்கள் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.