/* */

ஆக்சிஸன் வசதியுடன் 90 படுக்கைகள்

90 படுக்கைகளுக்கு ஆக்சிஸன் வசதி..

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூச்சு தின்றல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் மேலும் 90 படுக்கைகளுக்கு ஆக்சிஸன் வசதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூச்சு தினறல் காரணமாக ஏராளமானோர் தினசரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். ஏற்கனவே ஆக்சிஸன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட வார்டுகள் நிரம்பிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 40 படுக்கைகள் கொண்ட 4 வார்டுகளில் ஆக்சிஸன் வசதி செய்யப்பட்டது.

அந்த வார்டுகளும் முழுவதுமாக நோயாளிகளால் நிரம்பிய நிலையில் மீண்டும் தற்சமயம் ஆக்சிஸன் வசதியுடன் கூடிய90 படுக்கைகள் கொண்ட வார்டுகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் படுக்கைகள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில் தற்சமயம் ஆக்சிஸன் குழாய்களை நிறுவும் பணிகளில் டெக்னிசியன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அந்த பணிகள் முழுமையாக முடிவடையும் நிலையில் நாளை முதல் இந்த வார்டுகளும் செயல்பாட்டிற்கு வரும் என மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 10 May 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா