/* */

சிவகங்கையில் 300 கி.மீ தொலைவுக்கு தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடக்கம்

வருகின்ற வடகிழக்கு பருவமழையின் போது குளங்கள் மற்றும் கண்மாய்களில் முழு அளவு தண்ணீர் தேக்கும் விதமாக பணி தொடங்கியுள்ளது

HIGHLIGHTS

சிவகங்கையில்  300 கி.மீ தொலைவுக்கு தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடக்கம்
X

சிவகங்கையில் நடைபெற்ற தூய்மைப்பணி முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில் 300 கி.மீ. தொலைவுக்கு மாபெரும் தூர்வாரும் பணியினை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.

வருகின்ற வடகிழக்கு பருவமழையின் போது குளங்கள் மற்றும் கண்மாய்களில் முழு அளவு தண்ணீர் தேக்கிடும் விதமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நகராட்சி , பேரூராட்சி , ஊரகப்பகுதிகள் ஆகியவற்றில் இன்று முதல் வரும் 25 வரை ஒரு வார காலத்திற்கு மாபெரும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை ஆகிய நகராட்சிகளிலும், 12 பேரூராட்சிப்பகுதிகளிலும், 445 ஊராட்சிகளிலும் தூர்வாரும் பணி நடைபெறவுள்ளது. முதலாவதாக, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி அருகே மாபெரும் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகளிலும் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள தாகவும், இதன் மூலம் மழைக்காலத்தில் பெறுகின்ற தண்ணீர் விவசாயத்திற்கு பயன்பெறு வதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திடவும், குடிநீர் தேவைகளுக்கும் இத்தகைய திட்டம் பயனுள்ளதாக இருக்கும் . மழைக் காலங்களில் நகரில் தண்ணீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால் வழியாக குளங்களுக்கு செல்ல இத்திட்டம் பயனளிக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்,

Updated On: 20 Sep 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...