/* */

குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி

குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி
X

சிவகங்கை மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பரிதாபமாக பலியானார்கள்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியை அடுத்துள்ள பாகனேரியை பூர்வீகமாக கொண்டு தற்சமயம் விருத்தாச்சலம் பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வருபவர் ராஜ்குமார். இவரது பத்து வயது பெண் குழந்தை ஸ்ரீநிதியும், அதேபோல் சென்னை மாங்காடு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் வைரவமுத்து. இவரது பெண் குழந்தை வைஷ்ணவி. இவர்கள் இரு குடும்பத்தினரும் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் இரு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவர்களது தாயார் இருவரும் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த இரு பெண் குழந்தைகளும் எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கிய நிலையில் தாயார் இருவரும் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த கிராம மக்கள் இரு குழந்தைகளையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய நிலையில் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து மதகுபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Jan 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?