தொழிற்சாலையின் கழிவுநீரை ஏரியில் ஊற்ற வந்த மினி லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையின் கழிவு நீரை ஏரியில் கொண்டு வந்து ஊற்ற முயன்ற டேங்கர் லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் , சிப்காட்டைச்சேர்ந்த புளியங்கன்னு பகுதி, மற்றும் குருவிச்செட்டிதாங்கல் ஏரியில், இரவு நேரங்களில் கழிவுநீர் லாரிகள் அடிக்கடி வந்து போவதைப் பார்த்து அப்பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது ..
அதனைத்தொடர்ந்து மக்கள் எதிர்பார்த்தவாறு, இரவு கழிவு நீர் டேங்கர் லாரியை , அப்பகுதி ஏரியருகே வந்து நிறுத்திய டிரைவர் , மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கினார்.
அப்போது லாரியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த கிராமத்தினர், டிரைவரை மடக்கி, சிறைபிடித்தனர். பின்பு,வாலாஜா வட்டாட்சியர் மற்றும் சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீஸார் லாரிடிரைவரை, பொதுமக்களிடமிருந்து மீட்டு விசாரணை நடத்தினர் .
விசரணையில், அவர்சிப்காட் பகுதி காமராஜர் நகரைச்சேர்ந்த மணிமுத்து (27) என்பதும் சிப்காட்டில்உள்ள தனியார் கெமிக்கல் கம்பெனி டிரைவர் என்றும் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரைக் டேங்கர் லாரி மூலம் கொண்டு வந்து ஏரியில் ஊற்றவந்தார் என்பதையும் ஒப்புக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் வெற்றி வேல் தந்த புகாரின் பேரில் போலீஸார் மணிவண்ணனை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர் .பின்னர் லாரியிலிருந்து மாசுக்கட்டுபாட்டு அதிகாரிகள்கழிவு நீரை மாசுக்கட்டுப்பாடு ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.