இராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்
இராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த திருமணமான காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை டிஎஸ்பி ஆபிஸில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த திருமணமான காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்ன குக்குந்தியைச் சேர்ந்தவர் சுனில் குமார், இவர் பக்கத்து ஊரான பாப்பேரியை சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சுனில் குமாரின் தந்தை வேதபுரி பாரதிய ஜனதா கட்சி ஆற்காடு ஒன்றிய தலைவராக உள்ளார். அவரது மகனின் திருமணத்தை ஏற்றுக் காெண்ட வேளையில் அர்ச்சனா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரது பெற்றோரும் சம்மதிக்க வேண்டும் என்று நினைத்தும், பாதுகாப்பு கருதியும் ராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் சுனில் குமார், அர்ச்சனா இருவரும் தஞ்சமடைந்தனர்.
இதனையடுத்து, டிஎஸ்பி பிரபு உத்தரவின்பேரில் சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீசார் காதல் திருமணம் செய்த தம்பதியினரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.