கொடிநாள் வசூலில் அதிக நிதி அளிக்க பொதுமக்களிடம் கலெக்டர் வேண்டுகோள்
இராணிப்பேட்டை முத்துக்கடைப் .பேருந்துநிலையத்திலிருந்து கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று கொடிநாள் வசூல் செய்தனர்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை முத்துக்கடைப் பேருந்து நிலையத்திலிருந்து சாலைகளில் ஊர்வலமாக சென்று இந்திய ராணுவ வீரர்கள்,அவர்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன்களுக்காக கொடிநாள் வசூல் செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று வசூல் செய்தனர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், நம்நாட்டின் பாதுகாப்பிற்காக முப்படைவீரர்கள் தங்கள் பெற்றோர்,மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து இந்தியநாட்டின் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பணியில் ஈடுபடும் முப்படைவீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையிலும் அவர்கள் குடும்பத்தினரின் நலனுக்காகவும் கொடிநாள் நிதியினை அதிக அளவில் வழங்குவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
எனவே மாவட்டம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், தங்களால்இயன்ற கொடிநாள் நிதியினை வங்கிட வேண்டும். என்று பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக ,அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடமிருந்து கொடிநாள் வசூலைத் துவக்கினார. பின்னர் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அனைவரிடமும் வசூல் செய்தார். .