இராமநாதபுரத்தில் தீவைத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பற்றி எரிந்த வீடு
இராமநாதபுரத்தில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர். தீ பற்றி எரிந்த வீடு
HIGHLIGHTS
இராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் சாயல்குடியில் உள்ள ஒரு மளிகை கடைகள் வேலை பார்த்து வந்தார். இவர் தீபாவளி விடுமுறைக்காக இராமநாதபுரத்திற்கு வந்தார். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இன்று குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டுக்குள் இருந்து கொண்டு உடலில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றிய உடன் வீடு முழுவதும் அங்கும் இங்கும் ஓடியாதல் வீடு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனை கண்ட அக்கம் பக்கம் வீட்டார்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்து முத்துவை அருகிலிருந்து மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.