100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ராமநாதபுரம் கடற்கரையில் மணல் சிற்பம்
100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
HIGHLIGHTS
ராமேஸ்வரம்: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பரப்புரை, வாக்குசேகரிப்பு, பிரச்சாரம் என தீவிரம் காட்டி வருகின்றனர். மாவட்டங்கள் தோறும் நூறு சதவிகித வாக்குப்பதிவு குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
வாக்காளர் கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்குப்பதிவு பயிற்சி, கோலப்போட்டி, நாட்டுப்புறக்கலைகள் மூலமாக விழிப்புணர்வு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களிடையே நூறு சதவிகித வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு மணற்சிற்பத்தை ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
மணற் சிற்பத்தில் ராமேஸ்வரத்தின் பழமையான அடையாளமான பாம்பன் பாலம், விவி பேட் வாக்கு பதிவு இயந்திரம், முகக்கவசத்தோடு வாக்களிக்கும் நபர், வாக்குபதிவு இயந்திரம் உள்ளிட்டைவை மணற்சிற்பமாக வரையப்பட்டிருந்தது.