/* */

வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி

வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி
X

இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது.

வரும் சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குகளை பதிவு செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், இன்று இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆபிசில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் இந்திய வரைபடம் அடங்கிய ரங்கோலி கோலம் பிரமாண்டமாக வரையப்பட்டிருந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய ரங்கோலி கோலமிட்டனர்.

இந்த போட்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ராமநாதபுரம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மகளிர் திட்டத்திற்கான மகளிர் குழுக்களை இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட எஸ்பி., கார்த்திக் மற்றும் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் விளம்பர வாகனத்தையும் பார்வையிட்டனர்.

Updated On: 10 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...