காவல்துறையினருக்கு வெயிலில் தாகத்தை தீர்க்க மோர்...
மக்கள் நீதி மையம் கட்சியினர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டுமென கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அதேபோல் நகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாமல் வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர் தொடர்ந்து கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் நடுரோட்டில் நின்று கொண்டு சோதனையில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மக்கள் நீதி மைய கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட விவசாய அணி செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி மற்றும்ஐடி மாநில துணைச் செயலாளர் செந்தில் குமார், ஆகியோர் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு மோர் வழங்கினர்
இதனை வாங்கி அருந்திய காவல்துறையினர் கொளுத்தும் வெயிலில் தாகத்தை தீர்க்கும் வகையில் தங்களுக்கு மோர் வழங்கிய மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளுக்கு அன்புடன் நன்றியும் தெரிவித்தனர்