45 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
பாலியல் வன்கொடுமை செய்த சுரேந்தருக்கு 10 ஆண்டுகாலம் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தார்
HIGHLIGHTS
45 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயா( 45) . அந்தப்பகுதியில் உள்ள வயல்களில் ஆடு மேய்ப்பது வழக்கம். இதேபோன்று ஜெயா கடந்த 14 1 2019 ஆம் ஆண்டு ஜெயா வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர்( 25 )என்பவர், ஜெயாவை பலாத்காரம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயா அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுரேந்திரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கை விசாரணை செய்த நீதிபதி முனைவர் சத்யா, பாலியல் வன்கொடுமை செய்த சுரேந்தருக்கு 10 ஆண்டுகாலம் கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.