/* */

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்ட அமைச்சர்

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்  மரக்கன்றுகளை நட்ட அமைச்சர்
X

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பசுமையாக்கும் விதத்தில், மருத்துவக் கல்லூரி முதல்வர் புவதி அறிவுறுத்தலின்படி, வளாகத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாநிலங்களவை எம்பி அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகர திமுக செயலாளர் நைனா முகமது மற்றும் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டனர்.

Updated On: 18 Oct 2021 1:30 AM GMT

Related News