சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையேடு வழங்கல்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது
HIGHLIGHTS
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், நாட்டு நலப்பணித் திட்டம் புதுக்கோட்டை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து புதுக்கோட்டை கோர்ட் அலுவலக வளாகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா, காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், நகர் மன்ற உறுப்பினர் ராஜா முகமது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். நகர துணை காவல் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ் மாணவர்களிடம் விழிப்புணர்வு கையேடு வழங்கி தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்க துணை தலைவர் இப்ராஹிம்பாபு வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் பிரசாத், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி, வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், மதியழகன், அப்துல்லா, ராஜேந்திரன், ராஜு, நந்தகுமார், பழனிகுமார், சந்திரசேகரன், கலைமணி, கிட்டப்பா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார். விழிப்புணர்வு பேரணி அரசு பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம் வழியாக நகர் மன்றத்தில் நிறைவடைந்தது.