புதுக்கோட்டை உழவர் சந்தை: திடீர் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர்
சந்தையில் காய்கறிகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலின்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
HIGHLIGHTS
புதுக்கோட்டை உழவர் சந்தையில் நகராட்சி ஆணையர் நாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரும், காய்கறி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள், குறைந்த விலையில் இந்த உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காலை நேரங்களில் அதிக அளவில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
ஆனால், ஒரு சில வியாபாரிகள் காய்கறிகளை உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று நகராட்சி ஆணையர் நாகராஜ் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கடைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலைகள் உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை செய்தார். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கிறார்கள் முகக்கவசம் அணிந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இருக்கிறார்களா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் உழவர் சந்தை அதிகாரிகள் நகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.