/* */

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2021-22 ஆம் ஆண்டிற்கு சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.31,000 கடன் தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை 1.5 சதவீதம் மட்டுமே ஆகும். அதன்படி, ஏக்கருக்கு ரூ.465 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. நடப்பாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்திட அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் (AICIL) என்ற பயிர் காப்பீடு நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2021 ஆகும்.

இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் 1431 பசலிக்கான அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையினை தொடர்புடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களிலோ காப்பீடு செய்து அதற்குரிய ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்ப்பதற்கும், தங்களுடைய விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பதிவு செய்த விவரங்களை சரிபார்ப்பதற்கும், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீட்டு பிரிமீயத் தொகையை செலுத்தி தங்களது நெற்பயிரை இயற்கை பேரிடர் பேரழிவினால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து வருவாய் இழப்பினை விவசாயிகள் ஈடு செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தினையோ அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தினையோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Updated On: 4 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!