ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு
புதுக்கோட்டையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் திட்டத்தை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஊட்டச்சத்து காய்கறி விதை தளை தொகுப்பினை வழங்கும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார்.
விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் காய்கறி விதை தளை தொகுப்பினை வழங்கி பேசியதாவது.
தமிழக முதல்வர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இன்று தமிழக முதல்வர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஊட்டச்சத்து விதை தளை தொகுப்பு திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
அதன் படி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஊட்டச்சத்தின் கீழ் காய்கறி விதை தளை தொகுப்பினை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பயனடைய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்து ராஜா தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் குணா மணி விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.