புதுக்கோட்டையில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த எம்பி அப்துல்லா
புதுக்கோட்டையில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த மாநிலங்களவை எம்பி எம் எம் அப்துல்லா.
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த மாநிலங்களவை எம்பி எம்.எம்.அப்துல்லா.
தமிழகம் முழுவதும் இன்று நகராட்சி மாநகராட்சி ,பேரூராட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளுக்கான தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ராஜகோபலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று திமுக மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.
மேலும் அதிகாரிகள் எம்பி அப்துல்லாவை வரிசையில் நிற்காமல் வாக்களிக்கலாம் என வற்புறுத்தியும் நான் பொதுமக்களுடன் வரிசையாக நின்று வாக்களிக்கிறேன் என அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நீண்ட நேரமாக நின்று தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா.