/* */

புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதி
X

புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட நேரிட்டது.

புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் வாகன ஓட்டிகள் அவதி.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில் ஏரிகள் கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்தும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் நேற்று தமிழகம் முழுவதும் ரெட் அலார்ட் அறிவித்திருந்த நிலையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. வானிலை மையம் புயல் கரையை கடந்து விட்டது என்று அறிவித்திருந்தது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் காலையில் இருந்தே பலத்த வெயில் அடித்தது. மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், மாலை 4 மணி முதல் சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால், வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். புயல் கரையை கடந்து விட்டது என்ற நிலையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Updated On: 19 Nov 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!