புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் வாகன ஓட்டிகள் அவதி.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில் ஏரிகள் கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்தும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் நேற்று தமிழகம் முழுவதும் ரெட் அலார்ட் அறிவித்திருந்த நிலையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. வானிலை மையம் புயல் கரையை கடந்து விட்டது என்று அறிவித்திருந்தது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் காலையில் இருந்தே பலத்த வெயில் அடித்தது. மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், மாலை 4 மணி முதல் சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால், வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். புயல் கரையை கடந்து விட்டது என்ற நிலையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.