மன்னர் கல்லூரி விளையாட்டு திடலில் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி
வெற்றி பெறும் வீரர்கள், அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்
HIGHLIGHTS
மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி நடைபெற்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் மண்டலத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கபடி போட்டி இன்று நடைபெற்றது. இந்தப்போட்டியில், தஞ்சாவூர் ,திருச்சி, திருவாரூர் ,நாகப்பட்டினம், உள்ளிட்ட கல்லூரிகளிலிருந்து 19 குழுக்களாக வந்திருந்த கபடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்..
இந்த கபடி போட்டியில் ஆக்ரோசமாக கபடி விளையாடிய வீரர்களின் ஆட்டத்தை பார்ப்பதற்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கபடி போட்டியை பார்த்து ரசித்தனர். இன்று நடந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் மண்டலத்திற்கு உட்பட்ட கபடி போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது