/* */

வெறி நாய் கடித்து குதறியதில் கூடாரத்தில் இருந்த 15 ஆடுகள் பலி

விராலிமலை அருகே நாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலியாகின.

HIGHLIGHTS

வெறி நாய் கடித்து குதறியதில் கூடாரத்தில் இருந்த 15  ஆடுகள் பலி
X

விராலிமலை அருகே கூடாரத்தில் இருந்த ஆடுகளை வெறிநாய் கடித்து குதறியதில் பலியான ஆடுகள்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மதயானைபட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர், செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். விராலிமலை அருகே புதுவயல் கிராமத்தில் கூடாரம் அமைத்து, 60-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு பின் அடைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு தெருநாய்கள், ஆட்டு கூடாரத்தில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியுள்ளன. ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் உள்ளிட்ட குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, 2 நாய்கள் ஆடுகளை கடித்து கொண்டிருந்துள்ளன.

உள்ளே சென்று பார்த்தபோது 17 செம்மறி ஆடுகளை, நாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது. மேலும் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. நாய்கள் ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் ஆட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது