உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அஞ்சலி
HIGHLIGHTS
உத்தரபிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு புதுக்கோட்டையில் ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது, மத்திய அமைச்சர் மகன் ஓட்டிச் சென்ற கார் ஏறி 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது அதனால் ஏற்பட்ட கலவரத்தின்போது மேலும் பலர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்தது.இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சர் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும், கொலை செய்யப்பட்ட விவசாயிகளின் ஆத்மா சாந்தியடைய ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.