/* */

தொழிற்பயிற்சி பெற ஆர்வமா? தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, பெரம்பலூர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தொழிற்பயிற்சி பெற ஆர்வமா? தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

கோப்பு படம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம் சார்பில், தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (இயந்திரவியல்/தானியங்கிவியல்) 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடம் இருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக (Online) வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, https://www.boat-srp.com/ (News & Events Column) என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க 16.10.2021 கடைசி நாள் ஆகும் என போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சத்தியவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Sep 2021 4:30 AM GMT

Related News