/* */

பெரம்பலூரில் காதலிக்க மறுத்த பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பெரம்பலூரில் காதலிக்க மறுத்த பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை போாலீசார வலை வீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் காதலிக்க மறுத்த பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
X
பெரம்பலூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டின் கேட்

பெரம்பலூர் பாரதிதாசன் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் டிரைவர் கணேசன். இவர் கார் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மகள் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் வேலைபார்த்து வருகிறார்.

பெரம்பலூர் அன்னைபருவதம்மா பள்ளி தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் செல்வா என்கிற நீலகண்டன் என்பவர் நேற்று இரவு 11 மணியளவில் குவார்ட்டர் மது பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி நிரப்பி அதனை கணேசன் விட்டு கேட்டில் வீசி இருக்கிறார். மேலும் டிரைவர் கணேசனையும், அவரது மகளையும் கொலை செய்யாமல் விடமாட்டேன் என கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து பார்வையிட்டனர்.போலீசார் நடத்திய விசாரணையில் , டிரைவர் கணேசனின் மகளை நீலகண்டன் ஒரு தலைப்பட்சமாக காதலித்துள்ளார் .

அந்தப் பெண் காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்து நீலகண்டன் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள நீலகண்டனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 17 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...