/* */

ஒப்பந்த ஊழியர்களின் தினக்கூலியை உயர்த்த தமிழக முதல்வருக்கு மனு

மின் வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ. 380 வழங்கிட தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.

HIGHLIGHTS

ஒப்பந்த ஊழியர்களின் தினக்கூலியை உயர்த்த தமிழக முதல்வருக்கு மனு
X

மின் வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி 380 ரூபாய் வழங்கிட மின்வாரிய தலைவர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் கூட்டம்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில், பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் கோரிக்கை மனு அனுப்பும் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டலச் செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற, சிறப்பு கூட்டத்தில் மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலியாக 380 ரூபாய் வழங்கிட வேணடும் என கேட்டு மின் வாரிய தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது தொழில் சம்பந்தமான சுயவிவரத்தை பதிவு செய்து கோரிக்கை அடங்கிய மனுவினை தபால் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் கோட்ட செயலாளர் நாராயணன், கோட்டஇணைச் செயலாளர் நல்லசாமி, அரவன் தர்மராஜ், கருப்பையா, மலரவன், அபிமன்னன் பிரவின் குமார், கிருஷ்ணன் ஆகிய ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

Updated On: 24 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?