/* */

பெரம்பலூரில் பிறந்து 11நாளே ஆன குழந்தையின் தாய் கொரோனாவுக்கு பலி

பெரம்பலூரில் பிறந்து 11நாளே ஆன குழந்தையின் தாய் கொரோனாவுக்கு பலியானார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் பிறந்து 11நாளே ஆன குழந்தையின் தாய் கொரோனாவுக்கு பலி
X

பெரம்பலூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி ரஞ்சிதா(26) பிரசவத்திற்காக கடந்த 12ந்தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 14 ந்தேதி ஆண்குழந்தை பிறந்தது.பிரசவத்திற்கு பிறகு ரஞ்சிதவிற்கு கொரோனா பரிசோதணை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சிகிச்சையில் இருந்த ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.அவரின் 11 நாள் குழந்தைக்கு கொரோனா பரிசோதணை செய்தனர்.அதில் குழந்தைக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து அந்த 11 நாள் குழந்தை இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்த போதும் குழந்தைக்கு பாதிப்பில்லை என்பது மருத்துவர்கள் உட்பட பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயத்தில் குழந்தையை பெற்றெடுத்த தாய் உயிரிழந்து விட்டாரே என்ற கவலை உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 May 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  2. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  3. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  4. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  5. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  7. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  9. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  10. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க