Begin typing your search above and press return to search.
ஆயுதப்படை காவல்துறையினருக்கு சட்டவிரோத கும்பலைக் கலைக்க சிறப்பு பயிற்சி
ஆயுதப்படை காவல் துறையின ருக்கு சட்ட விரோதமாக கூடும் கூட்டத்தினை எவ்வாறு கலைப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்கப் பட்டது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினருக்கு சட்ட விரோதமாக கூடும் கூட்டத்தினை எவ்வாறு கலைப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. மணி உத்தரவின்படி, மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு வாராந்திர கவாத்தில், சட்ட விரோதமாக கூடும் கலவர கூட்டத்தினை எவ்வாறு கையாண்டு கலைப்பது என்பது குறித்த பயிற்சி, ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் காவலர்களுக்கு கலவர கூட்டத்தினை அனுகும் முறையினையினையும், கூட்டத்தினை கலைப்பதற்கு என்ன என்ன யுத்திகளை பயன்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் சுப்பையா பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.