Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தல், ஒருவர் கைது
பெரமபலூரில் இரு சக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா தலைமையில் பெரம்பலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர். தமிழரசி மற்றும் அவரது குழுவினர் தீவிர சாராயம ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த நபரை சோதனை செய்தனர். சோதனையில் இருசக்கர வாகனத்தில் 15 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சாராயம் கடத்தி வந்த பெரியசாமி என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து கள்ளச்சாராயம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பெரியசாமியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.