பெரம்பலூர்: நகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நவம்பர் 8-ம் தேதியான இன்று காலை முதல் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதில் பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் சி.ஐ.டி.யு. ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த தினக்கூலி ரூபாய் 580/- வழங்கிட வேண்டும். நிலுவை தொகையுடன் வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த இ. பி. எஃப், இ. எஸ். ஐ , இன்சுரன்ஸ் திட்டத்திற்கு விவரங்கள் வழங்கிட வேண்டும், கடந்த ஒப்பந்த காலங்கள் மற்றும் தற்பொழுது உள்ள ஒப்பந்த காலங்களில் செலுத்தப்பட வேண்டிய ஈ.பி.எப். தொகையை முழுமையாக செலுத்த வேண்டும். ஒப்பந்தத்தில் செலுத்தப்படாத இ.பி.எப். தொகையை ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும். கொரோனா காலத்தில் தூய்மை காவலர்கள் என்று அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இ.எஸ்.ஐ. திட்டத்திற்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கிட வேண்டும் , குப்பைகளை கொட்ட இடம் ஒதுக்கி தரவேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறித்தி பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் 175 ஒப்பந்த ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களின் உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவாட்ட செயலாளர். கலைசெல்வன், தலைமயில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தலைவர் பொன்ராஜ், சி.ஐ.டி.யு. சங்க மாவட்ட தலைவர் அகஸ்டின்,துணைத் தலைவர் சிவானந்தம்,செயலாளர் ரெங்கநாதன்,அகில இந்திய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர்ராஜேந்திரன், உள்ளிட்ட துணி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.