Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு
பெரம்பலூர் அருகே பூட்டிய வீட்டின் பின்புற கதவை உடைத்து சுமார் 7 சவரன் நகை மற்றும் 37 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டது.
பெரம்பலூர் அருகே உள்ள வல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியம்மாள் என்பவர் நேற்றிரவு தனது வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 7 சவரன் தங்க நகை மற்றும் 37 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பெரியம்மாள் மங்கலமேடு போலீசில், புகார் தெரிவித்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.