ஈராேடு அருகே கண்களை கட்டிக்கொண்டு பள்ளி மாணவி சாதனை முயற்சி
வாசுமதி என்ற பள்ளி உலக சாதனைக்காக கண்களை மூடிக்கொண்டு போட்டோ, எழுத்துக்களை சுலபமாக படித்து பயிற்சி செய்து வருகிறார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆர்.வாசுமதி என்பவர் நம்பியூர் குமுதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் பெரம்பலூர் பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நேரில் சந்தித்த பள்ளி மாணவி ஆர்.வாசுமதி கண்களை மூடிக்கொண்டு போட்டோ மற்றும் எழுத்துக்களை சுலபமாக படித்து காட்டினார். உலக சாதனைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீவெங்கட்பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குன்னம் சி.இராஜேந்திரன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.நல்லதம்பி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தி.மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.