/* */

பெரம்பலூர் அருகே 2 வீடுகளில் நகை,பணம் கொள்ளை

பெரம்பலூர் அருகே 2 வீடுகளில் நகை,பணம் கொள்ளை
X

பெரம்பலூர் அருகே வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு விட்டு சுமார் 15 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமம் காந்தி நகரில் கணவனை பிரிந்து வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியை நவநீத பாலு மற்றும் அதன் அருகே உள்ள விவசாயி வீரபத்திரன் ஆகிய இரு வீடுகளில் நேற்று நள்ளிரவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு சுமார் 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து கொள்ளை தொடர்பாக விசாரணை செய்து வரும் மங்களமேடு காவல்துறையினர் வீட்டின் உரிமையாளர்களிடத்தில் கொள்ளை தொடர்பாக விசாரணை செய்ததில் இரவில் வந்த கொள்ளையர்கள் 4 பேரும் ஹிந்தி மொழியில் பேசியதாக தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

Updated On: 23 Feb 2021 9:31 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    மதுரையில் புரோட்டா மாஸ்டர் பயிற்சி பள்ளி..! சர்வதேச உணவான புரோட்டா..!
  2. தென்காசி
    8 நாட்களுக்குப் பின் குற்றால அருவியில் குளிக்க அனுமதி: மகிழ்ச்சியில்...
  3. கடையநல்லூர்
    தமிழக - கேரளா எல்லையில் பிடிபட்ட 12 அடி ராஜ நாகம்
  4. கல்வி
    உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்
  5. திருப்பரங்குன்றம்
    சோழவந்தான் ஆலயங்களில் வைகாசி திருவிழா..!
  6. கல்வி
    அறிவியல் மாணவர்களுக்கான 10 தொழில் வாய்ப்புக்கள்
  7. இந்தியா
    இந்தியாவில் கொடி கட்டிப்பறக்கும் உணவுத்துறை
  8. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே பலத்த மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்