Begin typing your search above and press return to search.
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாடத்தில் பங்கேற்ற பெரம்பலூர் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் அரசு வழங்குவதாக அறிவித்து தற்போது வரை வழங்கப்படாமல் இருக்கும் தினக்கூலி ரூ.380 ஐ உடனடியாக வழங்கிட வேண்டியும் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் முன்பாக கொட்டி தங்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையிட்டனர்.