Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் அருகே கனமழை- விளைநிலங்கள் பாதிப்பு
பெரம்பலூர் அருகே திடீர் மழையால் விளை நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பச்சைமலை பகுதியில் நேற்று திடீர் கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கோரையாறு, ஐயர்பாளையம், விஜயபுரம் மற்றும் தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் அதிகாலையிலேயே வெள்ளநீர் புகுந்து கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.
பருவமழை காலம் முடிவுற்ற நிலையில் அண்மை காலமாக வறட்சியே நிலவி வந்தது. இந்நிலையில் பெரம்பலூர் பச்சைமலை பகுதியில் திடீர் கனமழை பெய்துள்ளது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் அரும்பாவூரை ஒட்டியுள்ள கோரையாறு, ஐயர்பாளையம், விஜயபுரம் மற்றும் தொண்டமாந்துறை உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த வெள்ளநீர் ஊருக்குள்ளும் புகுந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.