தைப்பூச எதிரொலி..!பரமத்திவேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
![தைப்பூச எதிரொலி..!பரமத்திவேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு தைப்பூச எதிரொலி..!பரமத்திவேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு](https://www.nativenews.in/h-upload/2025/02/10/1976861-1838800-10-chicken.webp)
நாமக்கல் : பரமத்திவேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது. இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார் மற்றும் ப.வேலுாரை சேர்ந்த விவசாயிகள் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.
அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டு வாங்கிச்செல்வர். கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 500 ரூபாய்க்கு விற்பனையானது.
தைப்பூச விரதம் காரணமாக விலை வீழ்ச்சி
ஆனால், நேற்று 400 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், பரமத்திவேலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் தைப்பூச திருவிழாவுக்கு விரதம் இருப்பதால் நாட்டுக்கோழி விலை சரிந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu