/* */

நாகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்

நாகையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்
X
நாகையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திட பிரச்சார வாகனத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார். பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர் அங்கிருந்த பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்த பிரச்சார துண்டறிக்கையை வழங்கினார். தொடர்ந்து நாகை புதிய பேருந்து நிலையம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 நாட்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 11 Oct 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...