/* */

மனைவி இறந்த சோகத்தில் ஒரு மணிநேரத்தில் உயிரிழந்த கணவர்

நாகை அருகே சாவிலும் இணைபிரியாத வயதான தம்பதிகள் மனைவி இறந்த சோகத்தில் ஒரு மணிநேரத்தில் கணவரும் உயிரிழந்தார்

HIGHLIGHTS

நாகை அடுத்துள்ள நாகூர் பெரியார் பகுதியை சேர்ந்தவர்கள் புயல்மணி, லட்சுமி தம்பதியினர். 69 வயதான புயல்மணி, 63 வயதான லட்சுமி கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு லட்சுமிக்கு திடிர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருடைய மகன் ரவிக்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை நாகை அரசு தலைமை மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அவர் மருத்துவனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனிடையே மனைவி உயிரிழந்த சம்பவம் அறிந்த கணவர் புயல்மணி அடுத்த ஒரு மணிநேரத்தில் வீட்டிலேயே தனது உயிரைவிட்டார்.

சாவிலும் இணை பிரியாத வயதான தம்பதியினரின் சடலங்களை உறவினர்கள் ஒன்றாக வைத்து இறுதி சடங்குகளை செய்தனர். நாகை அருகே மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவரும் தனது உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 April 2021 12:15 PM GMT

Related News