Begin typing your search above and press return to search.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு வடக்கே கரை கடக்க வாய்ப்புள்ளது.
HIGHLIGHTS
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம், சென்னைக்கு கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு வடக்கே கரை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு மாற்றப்பட்டு, தொலைதூரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை குறிக்கும் வகையில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல், காரைக்கால் தனியார் துறைமுகத்திலும், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.