Begin typing your search above and press return to search.
வாக்கு எண்ணிக்கை மையம் செல்வோருக்கு கொரோனா சிறப்பு முகாம்
நாகையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்பதால் 6 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்கள் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் நாகப்பட்டினம் வேதாரண்யம் கீழ்வேளூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு இன்று கொரோனா தோற்று பரிசோதனை செய்யப்பட்டது.
நாகை கோட்டாட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் நடைபெற்ற பரிசோதனையில் வேட்பாளர்கள், முகவர்கள் என 500க்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.