போன் செய்தால் 10 நிமிடத்தில் வருவேன் -அதிமுக வேட்பாளர்
ஃபோன் செய்தால் 10 நிமிடத்தில் வருவேன் என கூறி அதிமுக வேட்பாளர் நாகப்பட்டினத்தில் வாக்கு சேகரித்தார்.
நாகை சட்டமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஷை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று பெருங்கடம்பனூர், நாகூர், பால்பண்ணைச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்த அவருக்கு அதிமுகவினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் தான் உள்ளூர் என்றும், தாங்கள் ஏதேனும் பிரச்சனை என எனக்கு ஃபோன் செய்தால் அடுத்த 10 நிமிடத்தில் உங்கள் முன் வந்து நிற்பேன் என்று பேசினார். மேலும், நாகையில் மருத்துவ கல்லூரி வருவதற்கு பாடுபட்டதாக கூறிய அவர், தங்கள் பகுதியின் சுக துக்கங்களில் பங்கெடுப்பென் என்று கூறினார்.