Begin typing your search above and press return to search.
நாகை: 3 ஊராட்சி தலைவர் பதவிக்கு 12 பேர் வேட்பு மனு தாக்கல்
நாகை மாவட்டத்தில் 3 ஊராட்சிமன்ற தலைவர் பதவிகளுக்கு 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
HIGHLIGHTS
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடி , வேதாரண்யம் ஒன்றியம் கத்தரிப்புலம், திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஆகிய மூன்று ஊராட்சிகளின் தலைவர்கள் உயிரிழந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த 15ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் சர்புதீன் , எட்டுக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் லேகா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் 3 ஊராட்சிமன்ற தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் 12 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை காலை 10 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது.