மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது
![மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது](https://www.nativenews.in/h-upload/2022/03/04/1490691-img-20220304-wa0022.webp)
பரவை அதிமுக பேரூராட்சித் தலைவர் கலா மீனா.
மதுரை மாவட்டம் பரவை பேருராட்சி மறைமுக தேர்தல் இன்று நடந்தது. இதில் 1- வது வார்டில் அ தி மு க சார்பில் வெற்றி பெற்ற கலா மீனா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பரவை பேரூராட்சியில் அ.தி.மு.க.வுக்கு 8 இடங்கள் உள்ளன. 6வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட துரை சரவணன் (வயது 43)தி.மு.க. சார்பில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். சுயேட்சை உள்பட தி.மு.க.வுக்கு 7 இடங்கள் உள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலையில்சமயநல்லூர் காவல் உதவி கண்காணிப்பாளர் பாலசுந்தரம் தலைமையில் 70 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கலா மீனா வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu