/* */

மதுரையில் தீபாவளிச்சீட்டு மோசடி; தம்பதி தலைமறைவு

மதுரை மாவட்டம், பரவையில் தீபாவளி சீட்டு நடத்தி 600க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த, தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மதுரையில் தீபாவளிச்சீட்டு  மோசடி; தம்பதி தலைமறைவு
X

மதுரையில் பணமோசடி செய்த தம்பதி தலைமறைவு

மதுரை மாவட்டத்தில், தீபாவளி சீட்டு பணம் பிடிப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவான போலீஸ் எஸ்.ஐ மற்றும் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். பரவை பேரூராட்சியைச் சேர்ந்தவர் மோகன்குமார். மதுரை குற்றப்பிரிவு போலீசில் எஸ்.ஐ., ஆக பணிபுரிகிறார் . இவரது மனைவி கஸ்தூரி, தீபாவளி சீட்டு பணம் பிடிப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 600 பெண்களிடம், தலா ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பித் தராமல், இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனையடுத்து, மோகன்குமார் - கஸ்தூரி தம்பதி வீட்டை பூட்டிவிட்டு, பணத்துடன் மாயமாகி விட்டனர் . இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 1 Oct 2022 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  7. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  8. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  9. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  10. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்