ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 5 ரோடு ரவுண்டானா அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உறுதிமொழி எடுத்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் போது அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் வின்சென்ட், மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் லலித் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் விழா ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளரும், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன் தலைமை வகித்தார். முன்னாள் நகர தலைவர் தளபதி ரகமத்துல்லா, மாவட்ட துணை தலைவர் டாக்டர் தகி. மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில செயற்குழு உறுப்பினர் அக.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.