Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்புப்பணிகள்... நகராட்சி பணியாளர்கள் 'வேகம்'
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில், கொரோனா தடுப்பு பணிகளில், நகராட்சி பணியாளர்கள் 60 பேர் ஈடுபட்டுள்ளனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று, நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, நகராட்சி ஊழியர்கள் 15 பேர் தினமும் நகரில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் மருந்து தெளித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மட்டும், ஒருநாளைக்கு 4 முறை மருந்து தெளிக்கின்றனர்.
மேலும் கிருஷ்ணகிரியில், மக்கள் அதிகம் வந்து செல்லும் புதிய பஸ் ஸ்டாண்ட், பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட், தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம், நகர போலீஸ் ஸ்டேசன், டி.எஸ்.பி., அலுவலகம், தலைமை அஞ்சல் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் தினமும் மருந்து தெளித்து வருகின்றனர்.
நகராட்சி பகுதியில் விழிப்புணர்வு வழங்குவது, கொரோனா தடுப்பு நோட்டீஸ் வழங்குவது, பொதுமக்களிடம் கொரோனா தொற்று குறித்து எடுத்துரைப்பது ஆகிய பணிகளில் மட்டும், 60 நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கொரோனாவில் இரண்டாவது தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் வருபவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.