/* */

உள் ஒதுக்கீடு வழங்காதது வேதனை- ஜி.கே. மணி

உள் ஒதுக்கீடு வழங்காதது வேதனை- ஜி.கே. மணி
X

தமிழகஅரசு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காமல் காலம் தாழ்த்துவது வேதனை அளிக்கிறது என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

கிருஷ்ணகிரியில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது கவலை அளிக்கிறது. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நாளை வித்தியாசமான வெற்றி போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருக்க கூடிய வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் கட்சி கொடி, சின்னத்திலேயே பங்கேற்கிறார்கள்.20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு வந்த நிலையில் அதை தளர்த்தி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்டு வருகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்டஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நடக்கும் போராட்டத்தில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். தமிழகஅரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Updated On: 28 Jan 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு