உள் ஒதுக்கீடு வழங்காதது வேதனை- ஜி.கே. மணி
தமிழகஅரசு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காமல் காலம் தாழ்த்துவது வேதனை அளிக்கிறது என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
கிருஷ்ணகிரியில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது கவலை அளிக்கிறது. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நாளை வித்தியாசமான வெற்றி போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருக்க கூடிய வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் கட்சி கொடி, சின்னத்திலேயே பங்கேற்கிறார்கள்.20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு வந்த நிலையில் அதை தளர்த்தி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்டு வருகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்டஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நடக்கும் போராட்டத்தில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். தமிழகஅரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.