Begin typing your search above and press return to search.
மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் : காவல் துறை தீவிரம்
கரூரில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிற சூழலில், தமிழக அரசு பொதுமக்கள் அனைவரையும் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கரூரில் முக்கியப் பகுதிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு காவல் துறையினர் தீவிரமாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாஸ்க் இல்லாமல் வரும் பொதுமக்களிடம் போக்குவரத்து காவல்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் தனியார் பேருந்துகளில் சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் பயணித்த பொதுமக்கள் மற்றும் நடத்துனரிடம் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.