குமரியில் ரோட்டில் சுற்றி திரிந்த ஆதரவற்ற இளம்பெண் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பகுதியில் சுற்றி திரியும் ஆதரவற்ற இளம் பெண்ணை மீட்பு.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பகுதியில் சுற்றித் திரியும் ஆதரவற்ற இளம் பெண்ணை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி வளாகத்தில் கடந்த இரு தினங்களாக சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அலங்கோலமாக சுற்றித்திரிந்தார். அங்கு கிடைக்கும் உணவுகளை உண்டு கண்ட இடங்களில் தூங்கியுள்ளார். இதனை கண்ட சுவாமிதோப்பு பஞ்சாயத்து தலைவர் மதிவாணன் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த இன்ஸ்பெக்டர் அந்த இளம்பெண்ணிடம் விசாரித்து உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுவாமி தோப்பு பகுதிக்கு வந்த இளம்பெண் அலங்கோல ஆடையுடன் சுற்றி திரிந்த நிலையில் சிலர் புதிய ஆடை வாங்கி கொடுத்து அவருக்கு உணவு கொடுத்துள்ளனர்.
தற்போது பதி வளாகத்தில் தூங்கும் இந்த இளம்பெண்ணை உறவினர்களுடன் ஒப்படைக்க அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.